செய்திகள்
மகன் பெபி மேத்யூ. தாய் ஆனி அம்மாள்

மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் சுருண்டு விழுந்து மரணம்

Published On 2018-06-08 07:44 GMT   |   Update On 2018-06-08 09:46 GMT
கேரளா மாநிலத்தில் மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காவுமடம் பாலா பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி ஆனி அம்மா (வயது 65). இவர்களது மகன் பெபி மேத்யூ (48). திருமணமாகவில்லை.

நேற்று மாலை பெபி மேத்யூக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி பெபி மேத்யூ பரிதாபமாக இறந்தார். மகன் இறந்தசெய்தியை அங்கு நின்ற தாய் ஆனி அம்மாளிடம் டாக்டர் கூறினார். இதைகேட்டு அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே ஆனி அம்மாளை அதே ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆனி அம்மாளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News