செய்திகள்

மும்பை பட்டேல் சேம்பர்சில் பயங்கர தீ விபத்து - 2 தீயணைப்பு வீரர்கள் காயம்

Published On 2018-06-09 03:37 GMT   |   Update On 2018-06-09 03:37 GMT
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். #MumbaiPatelChambers #fireaccident
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பை மிகப்பெரிய தொழில்நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம் அருகில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் என்ற கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது சற்று நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவி அனைத்து இடங்களும் வேகமாக எரியத்துவங்கின.

தகவல் அறிந்து முதற்கட்டமாக 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரரகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெகு நேரமாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தீயும் வேகமாக அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி எரியத்துவங்கியது.



இதையடுத்து, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அந்த கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், தீயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் முக்கிய தொழில் நகரமான மும்பையில் இதுபோன்ற தீவிபத்துக்கள் சமீபத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு கவனம் செலுத்தி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். #MumbaiPatelChambers #fireaccident
Tags:    

Similar News