செய்திகள்

கர்நாடகா காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அணைகள் நிரம்புவதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

Published On 2018-06-11 08:59 GMT   |   Update On 2018-06-11 08:59 GMT
குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு:

குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வருகிறது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னட, உடுப்பி, உத்தரகண்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமாரதாரா, நேத்ராவதி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News