செய்திகள்

டெல்லியில் ரூ.15 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய கைக்கூலி கைது

Published On 2018-06-26 15:15 GMT   |   Update On 2018-06-26 15:15 GMT
டெல்லியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த கைக்கூலியை கைது செய்த போலீசார், அவனுக்கு சப்ளை செய்த நபரை தேடி வருகின்றனர்.
புதுடெல்லி:

டெல்லி கஷ்மேரே கேட் பகுதியில் கைப்பையில் 3 கிலோ ஹெராயின் வைத்திருந்த நைஜீரியா நாட்டினரான எக்கேனே கென்னத் ஓன்யெட்டோபே(33) என்பவனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவனிடம் இருந்த 15 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில். ஆப்கானிஸ்தானில் இருந்து நைஜீரியாவை சேர்ந்த வேறொருவர் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் வழியாக அனுப்பிவைக்கும் போதைப்பொருட்களை டெல்லி, பஞ்சாப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் கைக்கூலியாக அவர் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கும் இடைத்தரகர்கள் மூலமாக போதைப்பொருட்களை அனுப்பி வந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒரு நைஜீரியா நாட்டவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.  #NigerianArrest #heroin
Tags:    

Similar News