செய்திகள்
ஜூன் மாதத்தில் 95 ஆயிரம் கோடியை எட்டிய ஜி.எஸ்.டி வருவாய் - நிதித்துறை செயலாளர் தகவல்
மே மாதத்தை விட ஜூன் மாத ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.95 ஆயிரத்து 610 கோடியாக உயர்ந்துள்ளதாக நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார். #GSTForNewIndia
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், மத்திய அரசு ஜி.எஸ்.டி தினத்தை கொண்டாடி வருகிறது.
மேலும், போலியான கணக்குகள் மூலம் வரி ஏய்ப்பு நடைபெறாமல் இருந்தால், வரி வருவாய் அதிகரித்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மே மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் 94 ஆயிரத்து 016 கோடியாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 95 ஆயிரத்து 610 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், ஜி.எஸ்.டியின் மாத வருவாய் 1 லட்சம் கோடியாக அதிகரிப்பதே இலக்காக கொண்டிருப்பதாகவும் அப்போது அவர் கூறினார். #GSTForNewIndia
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், மத்திய அரசு ஜி.எஸ்.டி தினத்தை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி வருவாய் குறித்து பேசிய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, மாதந்தோறும் சராசரியாக சுமார் 89 ஆயிரத்து 885 கோடி வருவாய் ஈட்டப்படுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை எட்டியதாகவும் கூறினார்.
மேலும், போலியான கணக்குகள் மூலம் வரி ஏய்ப்பு நடைபெறாமல் இருந்தால், வரி வருவாய் அதிகரித்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மே மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் 94 ஆயிரத்து 016 கோடியாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 95 ஆயிரத்து 610 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், ஜி.எஸ்.டியின் மாத வருவாய் 1 லட்சம் கோடியாக அதிகரிப்பதே இலக்காக கொண்டிருப்பதாகவும் அப்போது அவர் கூறினார். #GSTForNewIndia