செய்திகள்
ராஜஸ்தானில் கல்லூரி மாணவியை கற்பழித்த கும்பல் - பாஜக பிரமுகர் மகன் மீது குற்றச்சாட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கல்லூரி மாணவியை அவரது வீட்டிலேயே வைத்து கும்பல் கற்பழித்த சம்பவத்தில் பா.ஜனதா பிரமுகரின் மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் போபல் கர்த் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது காரில் வந்த 2 பேர் அந்த பெண்ணை இழுத்து காரில் போட்டனர். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அந்த பெண்ணை அவரது வீட்டுகே கொண்டு சென்று கற்பழித்தனர். மேலும் தனது 3 நண்பர்களையும் வரவழைத்தனர். அவர்களும் கல்லூரி மாணவியை கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். 5 பேர் சேர்ந்து கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ஒருவர் உள்ளூர் பா.ஜனதா பிமுகர் மகன் ஆவார். கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவானது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரசியல் தலையீடு காரணமாக கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
5 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் போபல் கர்த் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது காரில் வந்த 2 பேர் அந்த பெண்ணை இழுத்து காரில் போட்டனர். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அந்த பெண்ணை அவரது வீட்டுகே கொண்டு சென்று கற்பழித்தனர். மேலும் தனது 3 நண்பர்களையும் வரவழைத்தனர். அவர்களும் கல்லூரி மாணவியை கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். 5 பேர் சேர்ந்து கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ஒருவர் உள்ளூர் பா.ஜனதா பிமுகர் மகன் ஆவார். கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவானது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரசியல் தலையீடு காரணமாக கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
5 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.