செய்திகள்

கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு

Published On 2018-08-07 16:34 GMT   |   Update On 2018-08-07 16:34 GMT
திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கபடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
புதுடெல்லி:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையொட்டி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தலைநகர் டெல்லியில் நாளை அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்.

மேலும், நாளை மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
Tags:    

Similar News