செய்திகள்
சத்தீஸ்கர் முதல் மந்திரி ராமன்சிங் பீஷ்ம பிதாமகருக்கு நிகரானவர் - மந்திரி பேச்சால் சலசலப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரி ராமன் சிங், மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகருக்கு நிகரானவர் என மாநில மந்திரி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. #RamanSingh #AjayChandrakar #BhishmaPitamah
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மந்திரி அஜய் சந்திரகர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகன் போன்றவர். சட்டசபை தேர்தலில் தனது செல்வாக்கினால் மட்டுமே மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
பீஷ்ம பிதாமகருக்கு மட்டுமே தான் எப்போது இறப்போம் என்பது தெரியும். அதுபோல், முதல் மந்திரி ராமன் சிங்குக்கும் அந்த சக்தி உண்டு.
சத்தீஸ்கர் மக்களிடம் கொண்டுள்ள அன்பால் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். தேர்தலில் தோற்பது குறித்து அவர் தான் முடிவுசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அரசு விழாவில் முதல் மந்திரியை மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகருடன் ஒப்பிட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #RamanSingh #AjayChandrakar #BhishmaPitamah