செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் அவசர சட்டம் இயற்றக்கோரி அகில இந்து பரிஷத் பேரணி

Published On 2018-10-14 08:12 GMT   |   Update On 2018-10-14 08:12 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் இயற்ற கேரள அரசை வலியுறுத்தி அகில இந்து பரிஷத் அமைப்பினர் இன்று பேரணி நடத்தினர். #SabarimalaTemple #AkhilHinduParishad
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் இயற்ற கேரள அரசை வலியுறுத்தி அகில இந்து பரிஷத் அமைப்பினர் இன்று திருவனந்தபுரம் நகரில் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும்திரளாக பங்கேற்றனர். #SabarimalaTemple  #AkhilHinduParishad 
Tags:    

Similar News