செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 100 வயது மூதாட்டியை பதம் பார்த்த காமுகன் கைது

Published On 2018-10-24 13:07 GMT   |   Update On 2018-10-24 13:07 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் தூக்கத்தில் இருந்த 100 வயது மூதாட்டியை மூர்க்கத்தனமாக கற்பழித்த 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Youthrapes #100yearoldraped
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம், நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கங்கா பிரசாத்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி கடந்த திங்கட்கிழமை பின்னிரவு வேளையில் தனது அறைக்குள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது அந்த அறைக்குள் நுழைந்த அபிஜித் பிஸ்வாஸ்(20) என்பவன் அவரை மூர்க்கத்தனமாக கற்பழித்தான். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த அபிஜித் பிஸ்வாஸை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவன்மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சக்டா காவல் நிலைய போலீசார், இன்று கல்யானி கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். #Youthrapes #100yearoldraped 
Tags:    

Similar News