செய்திகள்

பாலக்காடு அருகே நகை கடை கொள்ளையர்கள் கைது

Published On 2019-01-02 04:35 GMT   |   Update On 2019-01-02 04:35 GMT
பாலக்காடு அருகே நகை கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாலக்காடு:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாசுக்கு நகை கடை கொள்ளையர்கள் பாலக்காடு பகுதியில் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து ஆலத்தூர் இன்ஸ்பெக்டர் எலிசபெத் தலைமையில் போலீசார் ஆலத்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது நகை கடை கொள்ளையர்களான கண்ணம்பிரையை சேர்ந்த அப்துல் சலாம் (24), பாம்பாடி ரெலின் ஜோசப் குரியன் (24), சங்கனாச்சேரி ஜாக்சன் (24) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருசக்கர வாகனம், தங்க செயின்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் விசாரித்த போது ஆலத்தூர், வடக்கஞ்சேரியில் பாதுகாப்பு இல்லாத நகை கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது.

மேலும் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் கொள்ளையடிக்க திட்டம தீட்டி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து 3 பேரும் 5கைது செய்யப்பட்டனர். பின்னர் பாலக்காடு சிறையில் அடைக்கப்பட்டனர்

Tags:    

Similar News