செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.சி.யின் மகனுக்கு காங்கிரசில் ‘சீட்’ ஒதுக்கீடு

Published On 2019-03-19 22:35 GMT   |   Update On 2019-03-19 22:35 GMT
எனது குடும்பத்தில் இருந்த அரசியல் மாறுபாட்டை சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் தந்திரமாக எனது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் சதி செய்துள்ளனர் என பா.ஜனதா எம்.எல்.சி. தெரிவித்துள்ளார். #JaivirSingh #BJP
நொய்டா:

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சி எம்.எல்.சி.யாக இருப்பவர் ஜெய்வீர் சிங். இவரது மகன் அரவிந்த்குமார் சிங். இவரை கவுதம புத்தர் நகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. பா.ஜனதா இன்னும் அங்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதுபற்றி ஜெய்வீர்சிங் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி ராஜ்குமார் சவுகான், 3 மகன்கள், மருமகன் என குடும்பமே பா.ஜனதாவுக்கு ஆதரவானவர்கள். ஆனால் எனது மகன் அரவிந்த்குமார் சிங் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதில் இருந்து அவரது கொள்கை வேறுவிதமாக உள்ளது. திருமணத்துக்கு பின் தனியாக வசித்துவருகிறார்.

நான் 2017-ல் பா.ஜனதாவில் சேர்ந்தபோதே அரவிந்த் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக எங்களது பல்கலைக்கழகத்தில் வேந்தர் பதவியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டார். அவருடனான சமூக, அரசியல் உறவுகள் எல்லாம் முடிந்துவிட்டது. எனது குடும்பத்தில் இருந்த அரசியல் மாறுபாட்டை சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் தந்திரமாக எனது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் சதி செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News