செய்திகள்

ராகுல்காந்தி சின்னப்பையன் - மம்தா பானர்ஜி தாக்கு

Published On 2019-03-29 01:02 GMT   |   Update On 2019-03-29 01:02 GMT
ராகுல் காந்தி சின்னப் பையன், மனதில் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசுகிறாரே தவிர வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள்” என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #RahulGandhi
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா நகரில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மம்தா பானர்ஜி மாநிலத்தை முன்னேற்றாமல், வளர்ச்சிப்பாதைக்கு செல்லவிடாமல் வைத்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.



இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், “ராகுல் காந்தி சின்னப் பையன். ராகுல் மனதில் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசுகிறார். இதைத் தவிர வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். #MamataBanerjee #RahulGandhi 
Tags:    

Similar News