செய்திகள் (Tamil News)
ஆந்திரா: என்கவுண்டரில் 6 மாவோயிஸ்டுகள் பலி
ஆந்திரப் பிரதேச காவல்துறையின் கிரேஹவுண்ட் படைகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்சிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தீகலமேட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு உடல்களுடன், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.