செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,271 பேருக்கு தொற்று

Published On 2021-11-14 05:12 GMT   |   Update On 2021-11-14 05:12 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 11,376 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 859 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 11,271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 6,468 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 307 ஆக உயர்ந்தது.

கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 174 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 285 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,63,530 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 11,376 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 859 ஆக உயர்ந்தது.

தற்போது 1,35,918 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 522 நாட்களில் (17 மாதம்) இல்லாத அளவு குறைவு ஆகும்.



நாடு முழுவதும் நேற்று 57,43,840 டோஸ்களும், இதுவரை 112 கோடியே 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 12,55,904 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 62.37 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News