இந்தியா (National)
ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்கை மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக நியமித்தது ஆம் ஆத்மி கட்சி

Published On 2022-03-21 05:35 GMT   |   Update On 2022-03-21 08:52 GMT
பஞ்சாப் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி எம்.எல்.ஏ. ராகவ் சதா ஆகியோரை எம்.பி. பதவிக்கான வேட்பாளராக நியமித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்.பி.க்கள் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 31-ந்தேதி நடைபெற இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏழு மாநிலங்களை எம்.பி.க்கள் தேர்வு செய்ய முடியும். இதில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. ஐந்து இடங்களுக்கும் வேட்பாளரை நியமித்து ஆம் ஆத்மி கட்சியால் வெற்றி பெற முடியும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஹர்பஜன் சிங், டெல்லி மாநில எம்.எல்.ஏ ராகவ் சதா ஆகியோரை மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளது. இதன்மூலம் இருவரும் மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள.

Tags:    

Similar News