இந்தியா (National)

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2024-02-03 13:32 GMT   |   Update On 2024-02-03 13:32 GMT
  • ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
  • கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குந்துகால் கடல் பகுதி வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News