இந்தியா

ஆந்திராவில் பன்றி சண்டை சூதாட்டம்- 5 பேர் கைது

Published On 2023-03-03 05:24 GMT   |   Update On 2023-03-03 05:24 GMT
  • சேவல் சண்டைக்கு அரசு தடை விதித்ததால் தற்போது பன்றி சண்டை நடத்தி வருகின்றனர்.
  • பன்றிகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை ஏராளமான மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

திருப்பதி:

ஆந்திராவில் கடப்பா, கர்னூல், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை பிரபலமாக நடத்தப்படுகிறது. சண்டையில் ஈடுபடும் சேவல்கள் மீது பலர் லட்சக்கணக்கில் பணம் கட்டுவார்கள்.

வெற்றி பெறும் சேவல் மீது பணத்தைக் கட்டியவர்களுக்கு 2 மடங்காக திருப்பி கொடுப்பது வழக்கம். சண்டை சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்தி வேடிக்கை பார்ப்பவர்கள் மீது பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்தது.

சேவல் சண்டைக்கு அரசு தடை விதித்ததால் தற்போது பன்றி சண்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏலூர் மாவட்டம், பாலச்சார்லா ராஜவரம் பகுதியில் நேற்று பன்றி சண்டை நடந்தது. ஏராளமானோர் பன்றிகள் மீது பந்தயம் கட்டினர். பன்றிகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை ஏராளமான மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

இதுகுறித்து ஜிலகுமில்லி போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பன்றி சண்டை நடத்திய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் பந்தயத்தில் ஈடுபடுத்திய 4 பன்றிகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News