நிலத் தகராறால் வாக்குவாதம்- இளம் பெண்ணை முதல் தளத்தில் இருந்து தள்ளிவிட்ட அதிர்ச்சி வீடியோ
- பெண் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- ரத்தம் சொட்ட அந்த பெண் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி அனன் விஹார் பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பாக மோனு சக்சேனா என்ற டீலருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரும், கட்டிடத்தின் முதல் மாடியின் கூரையில் நின்றுக் கொண்டு கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
அப்போது வாக்குவாதம் முற்றியதில், சக்சேனா திடீரென இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில், அந்த பெண் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தலையில் இருந்து ரத்தம் சொட்ட அந்த பெண் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தில், "முழு விசாரணை அவசியம் எனவும், பிரச்சினை எதுவாக இருந்தாலும், கூரையில் இருந்து தள்ளிவிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் தயக்கிமின்றி துஷ்பிரயோகம் செய்ய முடியாது. அதனால், டெல்லி போலீஸ், டெல்லி கவர்னர், ஆம் ஆத்மி அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என நெட்டிசன்கள் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.