இந்தியா (National)

கூகுளுக்கு தூய்மையான எரிசக்தி 'சப்ளை' செய்யும் அதானி

Published On 2024-10-04 03:07 GMT   |   Update On 2024-10-04 03:07 GMT
  • கூகுளின் கிளவுடு சேவைகளுக்கு அதானி குழுமம் தூய்மையான எரிசக்தியை வினியோகிக்க உள்ளது.
  • அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வர்த்தக உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது 'கிளவுடு' செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு தேவையான மின்சாரத்தை மின்தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் தூய்மையான எரிசக்தி மூலம் அனைத்து சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கூகுளின் கிளவுடு சேவைகளுக்கு அதானி குழுமம் தூய்மையான எரிசக்தியை வினியோகிக்க உள்ளது.

குஜராத் மாநிலம் காவ்டா எரிசக்தி பூங்காவில் அமையும் புதிய சோலார் மற்றும் காற்றாலை கூட்டு திட்டத்தில் இருந்து கூகுளுக்கு 61.4 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்யும். அந்த திட்டத்தில், அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வர்த்தக உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News