இந்தியா

காதலனை பயமுறுத்த தண்டவாளத்தில் குதித்த பெண்- அடித்து தூக்கிய ரெயில்! பதற வைக்கும் வீடியோ

Published On 2024-05-29 05:55 GMT   |   Update On 2024-05-29 06:24 GMT
  • கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
  • கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரெயில் நிலையத்தில் ராணி என அடையாளம் காணப்பட்ட 38 வயது பெண் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பதற வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ராணியும் அவரது லிவ் இன் பார்ட்னர் கிஷோரும் 2வது நடைமேடை நாற்காளியில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிட, தான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ராணி தண்டவாளத்தில் குதித்து கிஷோரை மிரட்டினார்.

அப்போது, கேரளா எக்ஸ்பிரஸ் நெருங்கி வருவதை அறியாத ராணி நடைமேடை அருகே சென்று ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் மோதி, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே ராணி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஜிஆர்பி கன்டோன்மென்ட்டின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சமர் பகதூர் கூறுகையில், "ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைக்கு, முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் வந்தவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News