இந்தியா (National)

லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் அனைத்தும் சீராக செயல்படுகிறது- இஸ்ரோ

Published On 2023-08-27 00:04 GMT   |   Update On 2023-08-27 00:04 GMT
  • பிரக்யான் ரோவர் மூலம் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • சந்திரயான் 3 திட்டத்தின் 2 குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியுள்ளது.

14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் அனைத்தும் சீராக செயல்படுவதாக கூறியுள்ளது.

பிரக்யான் ரோவர் மூலம் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்திரயான் 3 திட்டத்தின் 2 குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags:    

Similar News