ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வினேஷ் போகத்துக்கு நோட்டீஸ்
- அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளதால் பங்கேற்க முடியவில்லை.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதை தொடர்ந்து வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அப்பீல் மனுவும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாடு திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வினேஷ் போகத் கடந்த 9-ந் தேதி ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை.இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆனாலும் ஒரு ஆண்டில் 3 முறைக்கு மேல் ஊக்க மருந்து தடுப்பு சோதனை பங்கேற்காமல் இருந்தால் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வினேஷ் போக தற்போது தான் முதல் முறையாக அந்த சோதனையில் பங்கேற்கவில்லை. அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளதால் பங்கேற்க முடியவில்லை.
வினேஷ் போகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் விதமாக அவருக்கு இவ்வாறு பிரச்சினை ஏற் படுத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.