இந்தியா (National)

கலெக்டருக்கு வழங்கப்பட்ட போலி BISLERI தண்ணீர் பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அழிப்பு

Published On 2024-10-06 11:47 GMT   |   Update On 2024-10-06 11:47 GMT
  • மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக BILSERI பாட்டிலை வழங்கிய உதவியாளர்
  • போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அழிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக போலியான BILSERI பாட்டிலை அவரது உதவியாளர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது..

இதனையடுத்து, போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News