இந்தியா (National)

ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜாபர் சாதிக் தொடர்புடையவையா?

Published On 2024-10-26 10:00 GMT   |   Update On 2024-10-26 10:00 GMT
  • பள்ளிகள் மற்றும் விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
  • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள 4 தனியார் ஓட்டல்களுக்கு, ஆன்லைன் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அனுப்பப்பட்ட இ-மெயிலில், போதைப்பொருள் வழக்கில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர், உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனால், ஓட்டல்களில் தங்கியிருந்த மக்கள் பதறியடித்து வெளியேறினர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சென்று சோதனை நடத்தினர்.

இதன் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுக்கப்பட்ட ஆன்லைன் முகவரிகள் ஜாபர் சாதிக் உடன் தொடர்புடையவை அல்ல இந்த மிரட்டல் வீண் வதந்தி என போலீசார் தெரிவித்தனர்.

சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News