துபாய்க்கு ஓடிப்போகல, மீண்டும் இந்தியா வருவேன்: பைஜூ ரவீந்திரன்
- பைஜூஸ் நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- சவால்களை எதிர்கொண்டுள்ள பைஜுவை மீண்டும் புதுப்பிக்க உள்ளேன் என்றார்.
புதுடெல்லி:
பைஜூஸ் நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் பைஜூஸின் அடிப்படை வணிகம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், பைஜூ ரவீந்திரன் மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
பைஜூசுக்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன. அவை தொடர்ந்து வருவாய் ஈட்டுகின்றன. துணை நிறுவனங்கள் வருவாய் ஈட்டி வருகின்றன.
இந்த துணை நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன மற்றும் நன்றாகச் செயல்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ள பைஜுவை மீண்டும் புதுப்பிக்க உள்ளேன்.
நான் துபாய்க்கு ஓடினேன் என்று மக்கள் நினைப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஒரு வருடம் துபாய் வந்தேன். இது இங்கு தொடர்ந்து தங்குவதற்கு வழிவகுத்தது. ஆனால் நான் எங்கும் ஓடவில்லை.
நான் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன், அரங்கங்களை நிரப்புவேன். நேரம் முடிவு செய்யப்படவில்லை, அது விரைவில் நடக்கும்.
அதைச் செயல்படுத்த நான் ஒரு சதவீத வாய்ப்பைப் பார்க்க வேண்டும். என்ன உத்தரவு வந்தாலும் நான் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன்.
பைஜூஸ் மீண்டும் சந்தைக்கு புதிய அவதாரத்தில் வரும் என தெரிவித்தார்.