இந்தியா (National)

வெங்காயம் வரத்து தாராளமாக உள்ளது- மத்திய அரசு தகவல்

Published On 2024-07-06 01:55 GMT   |   Update On 2024-07-06 01:55 GMT
  • பருவமழை நன்றாக பெய்திருப்பது, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட குறுவை பயிர்கள் சாகுபடிக்கு ஊக்கம் அளித்துள்ளது.
  • உள்நாட்டு சந்தையில் வெங்காயம் தாராளமாக கிடைக்கிறது.

புதுடெல்லி:

மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடப்பாண்டில் உரிய நேரத்தில் பருவமழை நன்றாக பெய்திருப்பது, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட குறுவை பயிர்கள் சாகுபடிக்கு ஊக்கம் அளித்துள்ளது. சம்பா பருவத்தில் வெங்காய உற்பத்தி குறைவாக இருந்தபோதிலும், தற்போது உள்நாட்டு சந்தையில் வெங்காயம் தாராளமாக கிடைக்கிறது. அதன் சில்லரை விலை சீராக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News