இந்தியா

சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ்பாகல் நிருபர்கள் கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Published On 2023-08-21 11:28 GMT   |   Update On 2023-08-21 11:28 GMT
  • நிருபர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
  • அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை பூபேஷ்பாகல் தடுத்தார்.

ராய்ப்பூர்:

சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ்பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது.

சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ்பாகல் இன்று காலை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவே பாம்பு புகுந்தது. இதனால் நிருபர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை பூபேஷ்பாகல் தடுத்தார். அது விஷ பாம்பு அல்ல. ஒன்றும் செய்யாது விட்டு விடுங்கள் என்று கூறினார். அந்த பாம்பை வேறு பகுதிக்கு எடுத்து சென்று விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். பாம்புகளை கொல்ல வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

நிருபர்கள் கூட்டத்தில் பாம்பு புகுந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது.

Tags:    

Similar News