இந்தியா (National)

4 மகள்களையும் கொன்று தந்தை தற்கொலை.. டெல்லி அடுக்குமாடி வீட்டில் 5 சடலங்கள் கண்டெடுப்பு

Published On 2024-09-28 10:14 GMT   |   Update On 2024-09-28 10:15 GMT
  • கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் உள்ளே உள்ளே 5 சடலங்கள் கிடந்துள்ளது.
  • உயிரிழந்த பெண்களின் சடலங்களின் கையிலும் கழுத்திலும் சிவப்பு நாடா பிணைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பூட்டிய வீட்டுக்கள் இருந்து ஒரே குடும்பத்தை சேர்த்த ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்த நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது 5 சடலங்கள் கிடந்துள்ளது. சடலங்களுக்கு அருகே தூக்க மாத்திரைகளும் கிடந்துள்ளது.

 

உயிரிழந்தது அந்த வீட்டில் வசித்துவந்த ஹீராலால் சர்மா(46) மற்றும் அவரது நான்கு மகள்களான நீத்து(26), நிக்கி(24), நீரு(23),நிதி(20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வீட்டுக்குள் சென்ற அவர்கள் வெளியே வரவே இல்லை என்று கூறப்படுகிறது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.

 

ஹீராலால் சர்மாவின் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் மகள்களில் இருவர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எனவே மனைவி இறப்பும் மகள்களின் சிகிச்சை என மன உளைச்சலில் இருந்த ஹீராலால் 4 மகள்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்களின் சடலங்களின் கையிலும் கழுத்திலும் சிவப்பு நாடா பிணைக்கப்பட்டநிலையில் இருந்துள்ளது இந்த சந்தேகத்துக்கு வலு சேர்த்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News