இந்தியா

கோட்டை சுவர் இடிந்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

Published On 2024-09-12 09:38 GMT   |   Update On 2024-09-12 09:38 GMT
  • கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
  • அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் பெய்து வரும் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News