இந்தியா

கேரளாவில் 5-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை

Published On 2024-08-02 05:44 GMT   |   Update On 2024-08-02 05:44 GMT
  • அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை.
  • பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.

இந்நிலையில கேரள மாநிலத்தில் வருகிற 5-ந்தேதி கரை கமனழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட டுள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் டியூசன் மையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

அதேபோல் பாலக்காடு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி கள், டியூசன் மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.

இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News