இந்தியா (National)

போலீசார் தாக்கியதில் வாலிபர் மரணம்- குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைக்க முயற்சி

Published On 2023-04-27 12:10 GMT   |   Update On 2023-04-27 12:10 GMT
  • சிரஞ்சீவியை ஜெயிலில் அடைக்காததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், செகந்திராபாத், எஸ்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரை துக்காராம் கேட் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சிரஞ்சீவியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிரஞ்சீவி உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி பரிதாபமாக இறந்தார்.

சிரஞ்சீவி இறந்த தகவலை போலீசார் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை. அவரது சாவை ரகசியமாக வைத்திருந்தனர். சிரஞ்சீவியை ஜெயிலில் அடைக்காததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சிரஞ்சீவி குறித்து விசாரித்தனர்.

அப்போது போலீசார் உடல்நிலை குறைவு காரணமாக சிரஞ்சீவி ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டதுதம் சிரஞ்சீவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிரஞ்சீவியை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும், சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

சிரஞ்சீவி உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவர் எப்படி இறந்தார் என அறிக்கை கிடைக்கும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News