இந்தியா

தாமரை வடிவிலான சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டது: மக்களவையில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

Published On 2024-07-29 09:11 GMT   |   Update On 2024-07-29 11:01 GMT
  • பாஜக ஆட்சியில் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர்.
  • தாமரை வடிவில் சக்கரவியூகம் அமைத்து மக்களவை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சக்கர வியூகத்தில் அபிமன்யூ சிக்கியதை போல் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிக்கியுள்ளனர்.

பாஜக ஆட்சியில் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் அனைத்து விசயங்களிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இளைஞர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை உள்ளது.

தாமரை வடிவில் சக்கரவியூகம் அமைத்து மக்களை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

அச்சம் எனும் சக்கரவியூகத்தை அமைத்து மக்களை பயமுறுத்தி வருகின்றனர் மோடி, அமித் ஷா. மகாபாரத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டது போல் மோடி மற்றும் அமித் ஷாவால் புதியதாக அமைக்கப்படடுள்ள சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கி உள்ளனர்.

சக்கரவியூகம் அமைத்து நாட்டு மக்களை கொள்ளை அடித்து வருகின்றனர்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News