இந்தியா

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - சிறுவர்கள் பரபரப்பு வாக்குமூலம் - அதிர்ச்சியில் ஆந்திரா

Published On 2024-07-11 09:27 GMT   |   Update On 2024-07-11 09:27 GMT
  • கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
  • சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை அடுத்து சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த மோப்ப நாய் அப்பகுதியை சேர்ந்த 6 மற்றும் 7 வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது. இதையடுத்து போலீசார் அம்மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது.

பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை முச்சுமரி அணைக்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை பாசன கால்வாயில் வீசியதாகவும் கைதான சிறுவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமராவதியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள முச்சுமரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.

Tags:    

Similar News