இந்தியா (National)
பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்த நிதின் கட்கரி: காரணம் இதுதான்
- பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல என்றார்.
- நம்பிக்கைக்கும், எனது அமைப்புக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் பதவிக்கான போட்டியில் ஒரு அரசியல் தலைவர் என்னை ஆதரிக்க முன்வந்தார். ஆனால் அவரது அந்த லட்சியத்திற்கு நான் செவி சாய்க்கவில்லை.
எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என அந்த நபர் கூறினார்.
நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும், உங்கள் ஆதரவை நான் ஏன் எடுக்கவேண்டும் என்று கேட்டேன். பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல. எனது நம்பிக்கைக்கும் எனது அமைப்புக்கும் நான் விசுவாசமாக இருக்கிறேன், அதற்காக நான் சமரசம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.
இந்த உரையாடல் எப்போது நடந்தது என்பதை நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.