இந்தியா

ராகுலுக்கு குழந்தை புத்தி: மக்களவையில் பிரதமர் மோடி கிண்டல்

Published On 2024-07-02 12:22 GMT   |   Update On 2024-07-02 15:11 GMT
  • நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.
  • ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை என்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

மக்களவையில் ராகுலின் நேற்றைய செயல்பாடுகள் குழந்தைத்தனமாக இருந்தது.

ஏதோ பாதிக்கப்பட்டவர் போல் மக்களவையில் நாடகத்தை அரங்கேற்றினார் ராகுல்.

குழந்தை புத்தி உள்ளதால் ராகுலுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.

ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை.

குழந்தை புத்தி உள்ள ஒருவரால் தான் மக்களவையில் கண்ணடிக்க முடியும்.

குழந்தை புத்தி உள்ள ஒருவர் தான் மக்களவையில் ஒருவரை திடீரென கட்டிப்பிடிக்க வைக்கும்.

நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.

ஜாமினில் உள்ள ஒருவர் தன்னை நிரபராதி என நினைத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News