இந்தியா

மனித குலத்தை காப்பாற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது- ஜனாதிபதி

Published On 2024-06-27 07:03 GMT   |   Update On 2024-06-27 07:03 GMT
  • இந்திய மக்கள் எப்போதுமே ஜனநாயகம், தேர்தல் மீது தங்கள் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
  • சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

இந்திய மக்கள் எப்போதுமே ஜனநாயகம், தேர்தல் மீது தங்கள் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், அங்கு இந்திய அரசியல் சாசனம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

கொரோனா, பூகம்பம், போர் சூழல்கள் போன்ற எந்த ஒரு சோகமாக இருந்தாலும், மனித குலத்தை காப்பாற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் லட்சியமும் உறுதியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எமர்ஜென்சி காலம் குறித்து ஜனாதிபதி பேசியபோது, எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News