இந்தியா

புருனே புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

Published On 2024-09-03 03:30 GMT   |   Update On 2024-09-03 03:30 GMT
  • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். நரேந்திர மோடிதான் புருனே செல்லும் முதலாவது இந்திய பிரதமர்.

இந்தியா- புருனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

Tags:    

Similar News