தமிழ்நாடு (Tamil Nadu)

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2024-10-13 11:17 GMT   |   Update On 2024-10-13 16:27 GMT
  • மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி ஜி.என்.சாய்பாபா கைது செய்யப்பட்டார்.
  • 2017ஆம் ஆண்டு பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று உயிரிழந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி ஜி.என்.சாய்பாபா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கல்லூரியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் 2017ஆம் ஆண்டு பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அவரை விடுவித்தது. கிட்டதட்ட 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒத்து தொடர்பான அவரது பதிவில், "பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களது மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News