இந்தியா

வங்காளதேசம் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாகிஸ்தான் குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

Published On 2024-08-06 10:33 GMT   |   Update On 2024-08-06 10:33 GMT
  • வங்காளதேச போராட்டத்தில் வெளிநாடு சக்திகளின் தலையீடு இருப்பதாக தகவல்.
  • குறிப்பாக பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக தகவல் வெளியானது குறித்து ராகுல் காந்தி கேள்வி.

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்துள்ளார். ராணுவம் இடைக்கால அரசு அமைக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

வங்காளதேச தேசத்தில் அசாதாரண நிலை நிலவி வரும் நிலையில் இந்திய அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில், போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில வாரங்களாக டாக்காவில் நடந்த செயல்களில் வெளிநாட்டு சக்திகளின், குறிப்பாக பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக செய்திகள் வந்ததாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு "இந்த கோணத்தில் விசாரித்து வருகிறோம். வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வங்காளதேசத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் பாகிஸ்தான் டிப்ளோமேட்டிக் அதிகாரி ஒருவர் தனது சமூக ஊடக டிஸ்பிளே படத்தை தொடர்ந்து மாற்றி வந்ததாக செய்திகள் வெளியானது. இது ஏதாவது பெரிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறதா? என்று ஆய்வு செய்து வருகிறோம்" என பதில் அளித்தது.

மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News