இந்தியா (National)

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு ராகுல், பிரியங்கா நாளை செல்கிறார்கள்

Published On 2024-07-30 11:29 GMT   |   Update On 2024-07-30 11:29 GMT
  • வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
  • பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.

புதுடெல்லி:

கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனை அளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசுகையில், இழப்பீட்டு தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் நாளை வயநாட்டுக்கு செல்கின்றனர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News