இந்தியா (National)

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்காவிற்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் சோனியா காந்தி

Published On 2024-10-21 02:58 GMT   |   Update On 2024-10-21 02:58 GMT
  • காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
  • 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பலவருடங்கள் கழித்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சோனியா காந்தி கேரள வர இருப்பதாக, மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்கள். இதில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். எதாவது ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்பதால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டமன்ற தொகுதிகளுடன் வயநாடு தொகுதிக்கு நவம்பர் 23-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் சுமார் 3,64,422 வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜாவை வீழ்த்தினார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தியை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்றி வரகிறார்கள்.

காஙகிரஸ் கட்சியின் பொது செயலாளரும், அமைப்பாளருமான கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக செயல்பட இருக்கிறார்.

Similar News