இந்தியா

வெப்ப அலையால் தீப்பிடித்து எரிந்த ஏ.சி.

Published On 2024-05-30 10:03 GMT   |   Update On 2024-05-30 10:03 GMT
  • ஏ.சி. யூனிட்டிற்கான ஸ்டெபிலைசர் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. டெல்லியில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் 126 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே போல ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் கடும் வெப்ப அலை காரணமாக பஞ்சாபில் ஒரு கட்டிடத்தின் வெளிப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யூனிட் தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.சி. யூனிட்டிற்கான ஸ்டெபிலைசர் இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News