இந்தியா (National)

ஆந்திராவில் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் கொலை

Published On 2023-04-24 04:52 GMT   |   Update On 2023-04-24 11:39 GMT
  • வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
  • போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், கூடூர், வரத நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஷிரவாணி.

இவர்களுக்குள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

ஷிரவாணிக்கு காந்திநகரை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் கூடூர் அடுத்த நெர்னூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். அவர்கள் மிளகு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை நாகராஜால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நேற்று மாலை கத்தியை எடுத்துக்கொண்டு ஷிரவாணி வேலை செய்யும் மிளகு தோட்டத்திற்கு சென்றார்.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஷிரவாணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

வெங்கடேஸ்வரலு ஓடி வந்து நாகராஜை தடுத்து நிறுத்தினார்.

இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் வெங்கடேஸ்வரலுவையும் வெட்டினார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஷிரவாணி பரிதாபமாக இறந்தார்.வெங்கடேஷ் வரலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கூடூர் போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News