இந்தியா

குகி சமூகத்தினர் அமித் ஷா வீட்டு முன்பு போராட்டம்

Published On 2023-06-07 07:12 GMT   |   Update On 2023-06-07 11:01 GMT
  • இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
  • அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

புதுடெல்லி:

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குகி இனமக்களை காப்பாற்றுங்கள் போன்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டம் காரணமாக அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News