இந்தியா

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

Published On 2023-03-14 06:29 GMT   |   Update On 2023-03-14 06:29 GMT
  • மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கம்.
  • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.

இதில் பல்வேறு விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக, இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

மேலும், அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் மக்களவை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News