இந்தியா

தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி- கார்கே

Published On 2024-09-17 06:56 GMT   |   Update On 2024-09-17 06:56 GMT
  • பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
  • மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு குணங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும்- பெரியார்

மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News