இந்தியா (National)
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நூதன போராட்டம் அறிவிப்பு
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சந்திரபாபுநாயுடு சட்ட விரோத கைதை கண்டித்தும், உறங்கிக் கொண்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கண்களை திறப்பதற்காக எனக் கூறி இன்று இரவு 7 மணிக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு சாலைகள், வீட்டு மாடிகள், பால்கனிகளில் நின்று 5 நிமிடங்கள் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீகாகுளத்தில் காளி செட்டி என்பவர் தலைமையில் 50 மீட்டர் நீளம் உள்ள கருப்பு துணியை கையில் பிடித்தபடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.