இந்தியா (National)

8 மாதங்களாக மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டு ஜெயில்

Published On 2022-08-05 06:02 GMT   |   Update On 2022-08-05 06:02 GMT
  • ஆசிரியர் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவிகள் 5 பேருக்கு தொடர்ந்து 8 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
  • ஆசிரியர் கைது செய்யப்பட்டு தளிம்பரம்பு போக்சோ கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் தளிப்பரம்பு பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது.

இப்பள்ளியில் கடந்த 2013-ம் ஆண்டு பெரிங்கோம் ஆலப்பாடத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

விசாரணையில் அவர் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவிகள் 5 பேருக்கும் தொடர்ந்து 8 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆசிரியர் கோவிந்தன் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு தளிம்பரம்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஆசிரியர் கோவிந்தனுக்கு 79 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் ரூ.2.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News