இந்தியா (National)
திருப்பதி கோவில் 8 மணி நேரம் மூடல்
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
- 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 28-ம் தேதி திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படுகிறது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடையும்.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
எனவே, 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும்.
29-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் கதவுகள் 8 மணி நேரம் மூடப்படும்.
இதன் காரணமாக 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.